பிரதான செய்திகள்

248க்கு நாளை வேட்புமனு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இரண்டாம் கட்டமாக 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனுக்களை கையேற்கும் காலம் கடந்த 14ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 248 உள்ளூராட்சி மன்றஙக்ளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

கண்டியில் இலவச ஊடக செயலமர்வு! எதிர்வரும் 19 ஆம் திகதி

wpengine

மன்னார், முசலி பிரதேச பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு உபகரணம் வழங்கிய நியாஸ்

wpengine

எதிரிகள் எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும் தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை புகட்டு அமைச்சர் றிஷாட்

wpengine