செய்திகள்பிரதான செய்திகள்

175 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, மோதர லெல்லமா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 7 கிலோகிராம் ஹஷிஷுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மேலும் 9 கிலோகிராம் ஹஷிஷ், பள்ளி மாணவர்களுக்கு விற்க திட்டமிடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகள் மற்றும் 750 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் போதைப்பொருளின் மொத்த மதிப்பு நூற்று எழுபத்தைந்து மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான புளூமெந்தல் ரவியின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது, மேலும் சந்தேக நபர் தடுப்பு உத்தரவின் அடிப்படையில் மேலும் விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டார்,இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் அமர்வில் வர்த்தக அமைச்சர்கள்

wpengine

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு . .!

Maash

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

wpengine