Breaking
Fri. Apr 26th, 2024

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலிக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான சமா­தான முயற்­சிகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
கட்­சியின் தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களைத் தீர்த்து                           வைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்டு பின்பு இடை நிறுத்தி                              வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக வேந்தர் ஏ.எம். இஸ்ஸாக் மேற்­கொண்டு வரு­கிறார்.

சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­து­வரும் வேந்தர் இஷாக்கை தெரிவித்தார்.

ஹசன் அலி விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு ஒரு­வார கால­மாக இந்­தி­யாவில் இருந்­ததால்  சமா­தான முன்­னெ­டுப்­பு­களில் தாம­த­மேற்­பட்­டது. மீண்டும் சில தினங்­களில் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என்றார்.

கடந்த வருடம் பொல்­கொல்­லையில் நடை­பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய மாநாட்டில் கட்­சியின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்டு மேல­தி­க­மாக செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டார்.

கட்­சியின் அர­சியல் உயர்­பீட அலு­வல்கள் மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கா­ரங்­க­ளுக்­காக புதிய ஒரு செய­லாளர் நிய­மிக்­கப்­பட்டார்.

இவ்­வி­வ­கா­ரங்­களை ஏற்­க­னவே ஹசன் அலி கையாண்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்தே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *