பிரதான செய்திகள்

ஹக்கீம் தலைமை மு.கா. கட்சியினை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகின்றது- சேகு

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில்  புதிய கட்சி ஒன்றை பதிவு செய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீமின் அதிருப்தியாளர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

இது தனியாக முஸ்லிம்களின் அபிலாசைகளை நோக்காகக்கொண்டு இயங்கும் கட்சியாக இருக்கும்  என்று சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காகபயன்படுத்தி வருகிறார்.

முஸ்லிம்களுக்காக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம்களின் நலன்களைஅவர் புறந்தள்ளி வருகிறார் என்றும் இஸ்ஸதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை, செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.12 இலட்சம் சன்மானம்.

Maash

பண்டிகை காலத்தை முன்னிட்டு 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் 2500 ரூபாய்க்கு.

Maash

இரா.சம்பந்தனுக்கு எதிரான விசாரணை

wpengine