செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் ஒருவர் மரணம் .

வவுனியா – ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாமையுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடப்பெற்றுள்ளது.

வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளமையுடன் குறித்த விசேட அதிரடிப்படையின் வாகனம் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்ற நபரே உயிரிழந்தவராவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சந்திரிக்காவில் பைத்தியதால்! ஸ்ரீலங்கா சுதந்திர பெரமுன கூட்டமைப்பு என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை

wpengine

ஓட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு! அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

கற்பிட்டி – பாலாவி பகுதியில் வானில் சட்டவிரோதமாக இஞ்சி கடத்த முற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Maash