பிரதான செய்திகள்

விக்னேஸ்வரன்,சம்பந்தன் போன்றோரின் இனிப்புகளுக்கு முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்

வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் வடமாகாணத்துக்கு ஆதரவாக ஒருபோதும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் சீர்திருத்தம் ஒன்றை உருவாக்கி அதில் முஸ்லிம்களுக்கும் ஒரு பகுதி தருவதாக கூறி இனிப்புகளை ஊட்டும் விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றோரின் விளையாட்டுக்களுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் காலங்காலமாக நாட்டில் காணப்படும் இன ஒற்றுமையை யாராலும் அழிக்க முடியாதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

சிறு போக பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, தட்டுப்பாடின்றி உரம் வழங்க தீர்மானம் .

Maash

Dr அர்ச்சுனாவை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை..!

Maash

மன்னார் வைத்தியசாலை கட்டுமானம் ,மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.

Maash