Breaking
Sun. May 19th, 2024

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரும் தற்­போ­தைய அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான டி.ஆர்.எல். ரண­வீர, முன்னாள் உளவுத் துறை பிர­தானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண ஆகியோர் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லையை தொடர்ந்து விசா­ரணை என்ற பெயரில் முன்­னெ­டுத்த சில நட­வ­டிக்­கைகள் பாரிய சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ளது.

இது குறித்த விசா­ர­ணைகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில், ஏற்­க­னவே பெறப்­பட்ட சி.சி.ரி.வி. பதி­வு­களை கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா தொழில் நுட்ப ஆய்வு நிறு­வ­னத்­துக்கு அனுப்­பு­வது குறித்த நட­வ­டிக்­கைகள் பூர­ணப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதற்­கான வீஸா மற்றும் நட­வ­டிக்கை செல­வு­களைக் கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர சட்டம் ஒழுங்கு அமைச்சின் செய­லா­ள­ருக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அமைச்சின் பதி­லுக்­காக காத்­தி­ருப்­ப­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மன்றை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

 வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே,  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டப்­ளியூ.சி. விக்­ர­ம­சே­கர, மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­திர ஆகியோர் இது தொடர்­பி­லான விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்­பித்­தனர்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கார விசா­ர­ணை­களின் முன்­னேற்றம் தொடர்பில் ஆராய இது குறித்த வழக்கு நேற்று மீளவும்  புதுக்­கடை நீதி­மன்றின் 5 ஆம் இலக்க கட்­டிடத் தொகு­தியில் உள்ள அறையில் மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது இந்த படு­கொலை விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே, சாட்­சி­களை மறைத்­தமை மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச் சாட்­டுக்­களின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது முதல் சந்­தேக நப­ரான முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ர­ணவும் 2 ஆம் சந்­தேக நப­ரான முன்னாள் மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்­வாவும் பிர­சன்­ன­மா­கினர்.

விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் சி.டப்­ளியூ விக்­ர­ம­சே­கர, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோ­ருடன் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க மன்றில் அஜ­ரா­கி­யி­ருந்தனர்.
இந் நிலையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு கடந்த 14 நாட்­க­ளாக தாஜுதீன் விவ­கா­ரத்தில் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் சாராம்சம் நீதி­வா­னுக்கு  அறிக்­கை­யாக சமர்­ப்பிக்­கப்­பட்­டது.

இந் நிலையில் வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது முதலில் கருத்­துக்­களை முன்­வைத்த அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­ந­ாயக்க,கன­டா­வுக்கு சி.சி.ரி.வி. காட்­சி­களை அனுப்­பிய பின்னர் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் முத­லா­வது ஆய்வு அறிக்­கையைப் பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்ப்­ப­தா­கவும், பணப்பை மீட்­கப்­பட்ட விவ­காரம், சம்பவ இடத்தை புகைப்­பட ஆத­ார­மாக்­கிய பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் பிரத்­தி­யே­க­மாக இடம்­பெ­று­வ­தாகவும் மன்­றுக்கு அறி­வித்தார்.

 டிலான் ரத்­நா­யக்­கவின் வாதம் 
உண்­மையில் இந்த விவ­காரம் தொடர்பில் எமக்கு பாரிய சந்­தேகம் ஒன்று உள்­ளது. அதா­வது முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிர­தானி ஒருவர் வஸீம் தாஜு­தீனின் தொலை­பேசி விபரப் பட்டியலை ஏன் பெற வேண்டும். அதுவும் ஞாயிறு தின­மொன்றில் அவர் இந்த பட்­டி­யலை கோரி­யி­ருக்­கிறார். இதற்­கான காரணம் என்ன என்­பது குறித்து விசா­ரணை தொடர்­கி­றது.

அத்­துடன் குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய முத­லா­வது சந்­தேக நபர் செய்­துள்ள வாக்கு மூலத்தை ஆராய்ந்த  பின்னர் அவ­ரது கோரிக்கை பரி­சீ­லிக்­க­பப்டும் . எனவே சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கடந்த தவ­ணையில் முன்­வைக்­கப்பட்ட கார­ணி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க கோரு­கிறேன்.

சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக குற்ற­வியல் சட்­டத்தின் 32 ஆவது உறுப்­பு­ரை­யுடன் சேர்த்து பார்க்­கப்படும் 113 (ஆ), 296 ஆகிய அத்­தி­யா­யங்­க­ளுக்கு அமை­வாக  சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக குற்றச் சாட்டு உள்­ளது. எனவே அவர்­க­ளுக்கு பிணை வழங்க வேண்டாம் என்றார்.

மருத்­துவ சபையின் விளக்கம்
இதனைத் தொடர்ந்து வஸீம் தாஜு­தீனின் சடலம் மீது முதலில்  பிரேத பரி­சோ­த­னை­ செய்த வைத்­தியர் ஆனந்த சமர­சே­கர மீதான விசா­ர­ணைகள் குறித்து நீதிவான் நிஸாந்த பீரி­ஸினால் அந்த சபை சார்பில் வந்த நீதி­வா­னிடம் வின­வப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த மருத்­துவ சபையின் சட்­டத்­த­ரணி, ஆனந்த சம­ர­சே­கர வைத்­தியர் தனக்கு வழங்­கப்பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரிகை தொடர்பில் ஆட்­சே­ப­னங்­களை முன்­வைத்­துள்­ளதால் அவ­ருக்கு அது தொடர்பில் கால அவ­காசம் வழங்கப்படட்­டுள்­ள­தா­கவும் அதனால் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் ஜூலை 23 ஆம் திகதி இடம்­பெற திகதி குறிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அத்­துடன் அவ­ரது உத­வி­யா­ளர்­க­ளான வைத்­தியர் அமர ரத்ன, ராஜ­குரு ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ரான விசா­ர­ணைகள் ஜூலை 9 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளன என்றார்.இதனையடுத்து வழக்கு விசாரணைகள் ஜூலை 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *