Breaking
Wed. May 1st, 2024

வவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுளளது.
1945 ஆம் ஆண்டு இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை அனுமதிகளுக்கு கட்டணம் பெறக் கூடாது என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஆனாலும், இவற்றை மீறி வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிக் காணபர்படும் சில பாடசாலைகள் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் பணம் அறவீடு செய்துள்ளது.

இதனை பாடசாலை நேரடியாக மேற்கொள்ளாது பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஊடாக மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான பாடசாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *