பிரதான செய்திகள்

வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரின் இராஜினாமா அமைச்சரினால் நிராகரிப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான ஜெனரல் சுமித் பிலபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதற்கு அமைவாக பணிப்பாளரின் இராஜினாமா கடிதம் நேற்று அமைச்சரிடம் கையளித்த வேளையில், அவரினால் நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும், பணிப்பாளர் சுமித் பிலபிட்டியவை குறித்த பதவியில் நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

காதலால் வந்த வினை; தொலைபேசியில் வாய்தர்க்கம் உயிரை இழந்த அப்துல் அலி

wpengine

வெள்ளிமலை கள்ளிக்குளம் கீழ்வுள்ள பல ஏக்கர் அரச காணி அபகரிப்பு! பல அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவைப்பு

wpengine

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? இன்று 3 மணிக்கு முக்கிய அறிவிப்பு!

Editor