Breaking
Wed. May 22nd, 2024

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை செவ்வாய் இர­வாகும்.

 

எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது.

பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு  அறியத் தரு­மாறும் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் 6 ஆம் திகதி மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்­ளது.

இம் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பிர­தி­நி­திகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இது தொடர்­பான விப­ரங்­களை இன்று குப்தா பிர­சங்­கத்­திலும் 6 ஆம் திகதி மாலை மஃரிப் தொழு­கையின் பின்பும் அறி­விப்புச் செய்யும் படி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களும் வேண்டப்பட்டுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *