பிரதான செய்திகள்

ரணில்,சஜித் மீண்டும் சண்டை! பேச்சுவார்த்தை தடை

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு கட்சிகளின் அணிகளிடையே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தார்.


அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.


எனினும் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு எதிரான முன்வைத்த எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வாசுதேவின் அமைச்சில் சில துறையில் மாற்றம்

wpengine

வஸீம் தாஜுதீன் கொலை! சேனாநாயக்கவை சந்தித்த மஹிந்த,ரோஹித்த

wpengine

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

wpengine