Breaking
Sun. May 19th, 2024

(விடிவெள்ளி)

மதங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­கின்­றன. அனைத்து மதங்­களும் கரு­ணையையும் சமா­தா­னத்­தையும், இன நல்­லு­ற­வு­க­ளை­யுமே போதிக்­கின்­றன.

வணக்க ஸ்தலங்­களில் மத போத­கர்கள் மக்­களை நேரிய பாதைக்கு அழைக்­கி­றார்கள். பாவச் செயல்­க­ளி­லி­ருந்தும் தவிர்த்துக் கொள்­வதை வலி­யு­றுத்­து­கி­றார்கள்.

எமது நாட்டில் பௌத்த பன்­ச­லைகள், இந்துக் கோயில்கள், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ  ஆல­யங்கள் பல­நூற்­றாண்டு கால­மாக மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் நற்­ப­ணி­களில் ஈடு­பட்­டுள்­ளன. ஆனால் இன்று மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டிய பௌத்த மத­போ­த­கர்கள் மக்­களை ஒரு இனத்­துக்கு எதி­ராக செயற்­ப­டுத்­து­வதை அவ­தா­னிக்கும் போது கவ­லை­யாக இருக்­கி­றது.

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் அப்­பி­ர­தேச பன்­ச­லை­களின் தேரர்­க­ளினால் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்­புகள் தினம் அதி­க­ரித்து வரு­கின்­றன.

சட்­ட­ரீ­தி­யான பள்­ளி­வாசல்
தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் சட்ட ரீதி­யா­ன­தாகும். இது வக்பு சபையில் 2016 ஆம் ஆண்டு பள்­ளி­வா­ச­லாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­ச­லொன்றைப் பதிவு செய்­வ­தற்குத் தேவை­யான சகல ஆவ­ணங்­க­ளையும் பெற்றுக் கொண்டே வக்பு சபை இந்தப் பதி­வினை மேற்­கொண்­டுள்­ளது.

இதே­வேளை அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பௌத்த குருமார் இது சட்­ட­ரீ­தி­யான பள்­ளி­வாசல் அல்ல. இது ஒரு மத்­ர­ஸா­வாகும் என்றும் மத்­ர­ஸா­வையே பள்­ளி­வா­ச­லாக மாற்றிக் கொண்­டார்கள் என்றும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பது தவ­றாகும்.

பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணிகள்
நோன்பு காலத்தில் முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இப்­பள்­ளி­வா­சலில் இட­வ­சதி போதாமல் இருந்­த­மையால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் விஸ்­த­ரிப்பு வேலை­களை ஆரம்­பிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தது.

விஸ்­த­ரிப்பு வேலை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் தெஹி­வளை  கல்­கிசை மாந­கர சபை­யிடம் அதற்­கான அனு­ம­தி­யையும் கோரி­யது. தெஹி­வளை கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங்க அதற்­கான சட்ட ரீதி­யான அனு­ம­தி­யையும் வழங்­கினார். தேவை­யான ஆவ­ணங்கள் சமர்­பிக்­கப்­பட்டே அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

கடந்த வாரம் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு வேலைகள் இடம்­பெற்­ற­போது அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பௌத்த பிக்­குகள் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­துடன் விஸ்­த­ரிப்பு வேலை­களை உடன்­நி­றுத்திக் கொள்­ளும்­ப­டியும் வேண்­டி­னார்கள். பள்­ளி­வாசல் நிர்­வாகம் சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெறப்­பட்டே விஸ்­த­ரிப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து பௌத்த பிக்­குகள் கொஹு­வளை பொலிஸில் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு தொடர்பில் முறை­யிட்­டனர். பாத்யா மாவத்­தை­யி­லுள்ள சாரா­நந்த தம்ம நிகே­தையைச் சேர்ந்த என மல்­தெ­னியே சாரா­நந்த தேரர் மற்றும் களு­போ­வில ஹத்­போ­திய ரஜ­ம­கா­வி­கா­ரையைச் சேர்ந்த கர­வ­னல்லே காசி­யப்ப தேரர் உட்­பட தேரர்கள் பொலிஸில் முறை­பாடு செய்­தனர்.

விஸ்­த­ரிப்பு பணிகள் பொலி­ஸா­ரினால் நிறுத்தம்
பாத்யா மாவத்­தையைச் சேரந்த பௌத்த குரு­மார்கள் கொஹு­வளை பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் கடந்த சனிக்­கி­ழமை பள்­ளி­வா­ச­லுக்கு வந்து விஸ்­த­ரிப்பு வேலை­களைத் தடை­செய்­தனர். கட்­டட நிர்­மாணப் பொருட்­க­ளையும் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­ளு­மாறு உத்­த­ர­விட்­டனர். வேலை­செய்­து­கொண்­டி­ருந்த மேசன்­மார்­க­ளையும் தடுத்து நிறுத்­தி­னார்கள்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் அச்­சந்­தர்ப்­பத்­திலும் தனது தீர்­மா­னத்தில் உறு­தி­யாக இருந்­தமை பாராட்­டத்­தக்­க­தாகும். சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியைப் பெற்றே விஸ்­த­ரிப்புப் பணிகள் நடை­பெ­று­வ­தாக தமது பக்க நியா­யத்தைத் தெரி­வித்­தனர். ஆனால் இச்­சந்­தர்ப்­பத்தில் பொலிஸார்  அவர்கள் விதிக்கும் தடைக்கு வேறு காரணம் கூறி நியா­யப்­ப­டுத்­தி­னார்கள்.

பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு பிர­தே­சத்­தி­லுள்ள மக்கள் எதிர்ப்புத் தெரி­விப்­பதால் அனு­ம­திக்க முடி­யாது என அதி­கா­ரத்­துடன் தெரி­வித்­தனர்.

தெஹி­வளை பெரிய பள்­ளி­வா­சலில் கூட்டம்
பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தெஹி­வளை பெரிய பள்­ளி­வா­சலில் கூட்ட­மொன்று ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டது. இச்­சந்­திப்பில் கொஹு­வளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர்  என்போர் பொலிஸ் தரப்பில் பங்கு கொண்­டனர்.

பள்­ளி­வாசல் தரப்பில் அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள், பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தில் அங்கம் வகிக்கும் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள், உல­மா­ச­பையின் பிர­தி­நி­திகள் என்போர் கலந்து கொண்­டனர்.

R.R.T. அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்
தெஹி­வளை பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்­டத்தில் ஆர். ஆர்.டி.அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் பள்­ளி­வா­சலின் தரப்­பி­லான நியா­யங்­களை பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளிடம் விளக்­கினார்.

பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கைகள் மாந­கர சபை­யி­ட­மி­ருந்து சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெறப்­பட்டே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு பெளத்த தேரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றனர். பொலி­ஸாரும் இதனைத் தடை செய்­கின்­றனர். வேலையில் ஈடு­பட்­டி­ருந்த மேசன்­மார்­க­ளையும் தமது வேலை­களைச் செய்­ய­வி­டாமல் தடுத்­தி­ருக்­கி­றார்கள்.

தொடர்ந்தும் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு வேலை­களைச் செய்­வ­தென்றால் மேசன்மார் பொலிஸில் அனு­மதி பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மெ­னவும் அச்­சு­றுத்­தி­யுள்­ளார்கள். நீதி­மன்றம் தடை­யுத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­தாலே எம்மால் விஸ்­த­ரிப்பு வேலை­களை நிறுத்­த­மு­டியும்.

முஸ்­லிம்கள் இந்­நாட்டின் ஆட்­சி­மாற்­றத்­திற்கு பெரிதும் உத­வி­யுள்­ளார்கள் என்­றாலும் இன்று பள்­ளி­வாசல் நிர்­மா­ணங்­களும் விஸ்­த­ரிப்­பு­களும் பொலி­ஸா­ரி­னாலும் தேரர்­க­ளி­னாலும் தடுக்­கப்­ப­டு­கின்­றன. இது சட்­டத்­துக்கும் நீதிக்கும் புறம்­பான செயற்­பா­டு­க­ளாகும் என எடுத்து விளக்­கினார்.

பிரதி பொலிஸ் மா அதி­பரின் அனு­மதி
சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனின் வாதத்­தி­னை­ய­டுத்து பள்­ளி­வா­சலில் அவ­ச­ர­மாக தேவைப்­படும் சில விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அனு­மதி வழங்­கினார்.

பள்­ளி­வாசல் யன்­னல்­க­ளுக்கு கண்­ணாடி பொருத்துதல், படிகள் நிர்­மா­ணித்தல் உட்­பட சிறிய வேலை­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந்த விஸ்­த­ரிப்பு பணி­களை ஒரு­வார காலத்­தினுள் செய்து முடிக்க வேண்­டு­மெ­னவும் பிரதி பொலிஸ் மா அதி­ப­ரினால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆட்­சி­மாற்­றத்­திற்கு பெரும் பங்­க­ளிப்புச் செய்த முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை விஸ்­த­ரிப்­ப­தற்குக் கூட பொலி­ஸா­ரி­னதும் தேரர்­க­ளி­னதும் அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ள வேண்­டிய சூழல் எமது நாட்டில் உரு­வா­கி­யுள்­ளமை முஸ்­லிம்­களின்  சமய சுதந்­தி­ரத்தை  சவால்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. இந்த சவால்­களை முறி­ய­டிக்க முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும்.

அனு­மதி வழங்­கப்­பட்ட தினம் மீண்டும் தடை­உத்­த­ரவு
கடந்த திங்­கட்­கி­ழமை தெஹி­வளை பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்­டத்தில் பொலி­ஸா­ரினால் வழங்­கப்­பட்ட ஒரு­வார கால விஸ்­த­ரிப்பு பணிக்­கான அனு­மதி அன்று இரவு மறுக்­கப்­பட்­டது.

திங்­கட்­கி­ழமை இரு ஜீப் வண்­டி­களில் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கை­தந்த சுமார் 10 பொலிஸார் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்குத் தடை விதித்­தனர்.

திங்­கட்­கி­ழமை தெஹி­வளை பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்­டத்தின் பின்பு பொலிஸார் அப்­ப­குதி பன்­ச­லை­க­ளுக்குச் சென்று ஒரு­வார காலம் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அவ­காசம் வழங்­கி­யுள்­ளமை பற்றி தெரி­வித்­துள்­ளனர்.

இதனை தேரர்கள் கடு­மை­யாக எதிர்த்­த­த­னாலே அன்று இரவு பள்­ளி­வா­ச­லுக்கு வந்த பொலிஸார் தடை­வி­தித்­தனர். விஸ்­த­ரிப்பு பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்டால் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­படும் எனவும் தெரி­வித்­தனர்.

நாம் பயப்­படப் போவ­தில்லை
திங்­கட்­கி­ழமை இரவு பொலிஸார் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்­து­வ­தற்கு உத்­த­ர­விட்ட போது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லா­ளரும் R.R.T.அமைப்பின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

அவர் பொலி­ஸாரின் உத்­த­ர­வினை ஏற்­றுக்­கொள்­ளாது சவால் விட்­டமை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும். சமூ­கத்­துக்கும் மதத்­துக்கும் எதி­ரான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் போது எமது உரி­மை­க­ளுக்­கா­கவும் நாட்டின் அமு­லி­லுள்ள சட்­டத்­துக்­கா­கவும் குரல் கொடுக்க வேண்­டி­யது எமது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும்.

இந்தப் பள்­ளி­வாசல் கட்­ட­டத்தை நாம் விப­சாரம் செய்­வ­தற்­காக விஸ்­த­ரிக்­க­வில்லை. அல்­லாஹ்வைத் தொழு­வ­தற்­கா­கவே விஸ்­த­ரிக்­கிறோம். பொலிஸார் உள்ளே சென்று தாரா­ள­மாகப் பார்­வை­யி­டலாம். நாம் விஸ்­த­ரிப்பு பணி­களைத் தொடர்ந்து மேற்­கொள்வோம். அதற்­கான அனு­ம­தியை தெஹி­வளை கல்­கிசை மேய­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொண்­டுள்ளோம்.

நீதி­மன்றில் வழக்குத் தொட­ருங்கள். எங்­களை விளக்­க­ம­றி­யலில் வையுங்கள். எங்­களை எரி­யுங்கள். நாம் பயப்­ப­டப்­போ­வ­தில்லை. நாம் ஒரு குற்­றமும் செய்­ய­வில்லை. நல்ல காரி­யமே செய்­கின்றோம். நாம் நீதிக்­காக சர்­வ­தேசம் வரை செல்வோம். சட்­டத்­தின்­படி பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்கு எமக்கு உரி­மை­யுண்டு. எமது உரி­மை­க­ளுக்கு சவால்கள் வரும்போது பொலிஸார் எமக்கு பாது­காப்பு அளிக்க வேண்டும் என்று சிராஸ் நூர்தீன் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தமை எமது சமூ­கத்தின் குர­லாக அமைந்­தது.

அமைச்சர் பௌசி –ரணில் சந்­திப்பு
தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் பிரச்­சினை இன நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் விளை­விப்­ப­தாக உள்­ள­தென்­பதை விளக்கி பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரு­மாறு பிர­த­மரை வேண்­டினார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­பி­ரச்­சி­னையை இரு தரப்­பி­ன­ரையும் கலந்­து­ரை­யாடி தீர்த்து வைப்­ப­தற்கு இணங்­கி­யுள்­ளமை அப்­பி­ர­தே­சத்தில் இன நல்­லு­ற­வுக்கு வழி­வ­குக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் அழைத்து கலந்­து­ரை­யாடி சுமுக தீர்வு எட்­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. பிர­தமர் அழைப்­பு­வி­டுக்கும் கலந்­து­ரை­யா­ட­லுக்கு எமது அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தவ­றாது கலந்­து­கொள்ள வேண்டும். கலந்து கொள்­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்து பின்பு கலந்து கொள்­ளா­மைக்­கான நொண்டிக் காரணம் கூறு­வ­தி­லி­ருந்து எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நி­று­த்து­வ­தற்கு உறு­தி­யாக இருக்­கிறார். முஸ்­லிம்­களின் சம­யக்­க­ட­மை­க­ளுக்கு எந்தத் தரப்­பி­ன­ராலும் இடை­யூ­றுகள் ஏற்­ப­டா­தி­ருக்க  உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார் என அமைச்சர் பௌசி பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் பின் கருத்து  வெளி­யிட்­டுள்­ளமை ஆறுதலாக இருக்கிறது.

அமைச்சர் பௌசி இப்பிரச்சினையை பொறுமையாக கையாள ஏற்கனவே தெஹிவளை பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நோன்பு காலம் ஆரம்பமாகியுள்ளதால் நாம் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது இவ்விவகாரத்தை பொறுமையாக கையாள்வோம். அப்பிரதேச பௌத்த குருமார்களைச் சந்தித்து பேசுவோம். நாம் பிரச்சினைப்பட்டுக்கொண்டு தராவிஹ் தொழுவதற்கு சென்றால் சிலர் வேண்டுமென்றே கற்கள் எறிந்து முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். என்பதை மறக்க முடியாது.

அமைச்சர்கள் சந்திப்பு 
இப்பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அமைச்சர்கள் சமூக நலன் கருதியும் இஸ்லாத்தை நோக்கமாகக் கொண்டுமே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். பிரதமரையும் ஜனாதிபதியையும் தனித்தனியே சந்தித்து பேசி அறிக்கைகள் விடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே அணியில் திரண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மூலம் பாத்யா மாவத்தை பள்ளிவாசலை காப்பாற்றித் தர வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *