பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.


அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் சரணியா 3ஆம் இடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

Related posts

மன்னாரில் மூன்று வீட்டினை தாக்கிய இடி,மின்னல்

wpengine

500 மில்லியன் ரூபா இழப்பீடு – அர்ச்சுனா எம்பிக்கு வந்த அடுத்த சோதனை .

Maash

மூன்று மாத காலத்தில் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.

wpengine