பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தின் வான் பாய ஆரம்பித்துள்ளது

முல்லைத்தீவு – கணுக்கேணி குளத்தினை அண்மித்த பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணிமுதல் 16.30 மணி வரை 67 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கணுக்கேணி குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.


இந்நிலையில்,இன்று பகல் 12.30 மணிமுதல் 16.30 மணி வரையான காலப்பகுதியில் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் 21 மில்லிமீற்றர் மழையும், கணுக்கேணி குளம் மற்றும் மருதமடுக்குளம் ஆகியவற்றில் 67 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,உடையார்கட்டுகுளத்தின் கீழ் 20 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


மேலும்,கணுக்கேணி குளம் அதன் நீர்க்கொள்ளளவை எட்டியதுடன் வான் பாய ஆரம்பித்துள்ளது.

Related posts

மன்னாரில் கற்றாழை செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு! நடவடிக்கை எடுக்கப்படுமா

wpengine

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயரம்

wpengine

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine