பிரதான செய்திகள்

முசலி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் ஏற்பாடு

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் அமையபெற்றுள்ள சுகாதார அலுவலத்தின் ஏற்பாட்டில் இன ,நல்லுரவை பேனும் நோக்குடன் முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் தலைமையில் இன்று மாலை முசலி சுகாதார அலுவலத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வைத்திய அதிகாரி தெரிவிக்கையில்;

நான் இஸ்லாம் தொடர்பாக பல்வேறு நடைமுறைகளை கற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்றும் என்னுடைய மேசையில் முஸ்லாம் மதத்தின் புனித நூலான குர்ஆனை சில நேரங்களில் மேசையில் வைத்திருப்பது எனவும்,எமது பிரதேசத்தில் கடந்த கால நிகழ்வுகளை மறந்து இன நல்லுணர்வை வளர்த்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் எங்களுடைய குறுகிய கால ஏற்பாட்டினை ஏற்று வருகை தந்த அணைவரும் நன்றிகளையும் தெரிவித்துகொள்ளுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதர பணிமனையில் உள்ள உத்தியோகத்தர்,முசலி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பள்ளிவாசல் தலைவர் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நோன்பு திறந்தன் பின்பு வருகை தந்த அனைவரும் இரவு நேர உணவும் வழங்கி வைக்கபட்டது.e006a8ef-f0fa-4f48-a601-bd29c32126d905c149dd-2d5c-4694-91ec-4678011aaed76d050a0d-eb08-44b7-88e0-1f8daf56aae6ac699acd-dd57-409d-a20f-d0beadd0ad9c

Related posts

முஸ்லிம்களில் ஒரு சிலரின் தவறான செயற்பாடு! விமர்சனங்கள் எழுந்துள்ளன அமைச்சர் றிஷாட்

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும்

wpengine

ஜனாதிபதி எண்ணக்கரு வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine