Breaking
Fri. Apr 26th, 2024

பிபிலை வலயக் கல்விப் பணிப்­பா­ள­ராக சரீனா பேகத்தை மீண்டும் நிய­மிப்­ப­தற்கு ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.
கடந்த 10ஆம் திகதி  முன்­தினம் உயர் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போதே ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இந்த இணக்­கத்தை வெளி­யிட்­ட­தாக சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.

பிபிலை கல்விப் பணிப்­பா­ள­ராக 2015ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட சரீனா பேகத்தின் நிய­ம­னத்தை இரத்துச் செய்து பிறி­தொ­ரு­வரை ஊவா கல்வித் திணைக்­களம் நிய­மித்­தி­ருந்­தது.

தகுதி அடிப்­ப­டையில் தனக்கு வழங்­கிய நிய­ம­னத்தை தான் ஒரு முஸ்லிம் என்­பதால் இரத்துச் செய்­த­தாக சரீனா பேகம் உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செதி­ருந்தார்.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரான பரி­யா­சாந்த டெப் நஸில் பெரேரா மற்றும் ஜே. ஆப்ரூ ஆகியோர் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று முன்­தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே இந்த வழக்­கினை சம­ர­ச­மாகத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு ஊவா மாகாண கல்வித் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து இரு தரப்­பி­னரும் வழக்­கினை சம­ர­ச­மாக தீர்த்துக் கொள்­வ­தற்கு சம்­ம­தித்­தனர்.

இதற்­க­மைய மீண்டும் பிபிலை வலய கல்விப் பணிப்­பா­ள­ராக சரீனா பேகம் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்­கையின் முத­லா­வது முஸ்லிம் பெண் வலயக் கல்விப் பணிப்­பாளர் என்ற பெரு­மை­யையும் இவர் பெற்றுக் கொள்வார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ் வழக்கில் சரீனா பேகம் சார்பில் ஆர்.ஆர்.டி. நிறு­வன சிரேஷ் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந்த வழக்கில் தமக்குக் கிடைத்த வெற்­றி­யா­னது இலங்கை முஸ்­லிம்கள் சக­ல­ருக்கும் படிப்­பி­னைக்­கு­ரி­யது எனவும் முஸ்­லிம்கள் தமது உரி­மை­களை சட்­டத்தின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு எனவும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மேலும் குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *