பிரதான செய்திகள்

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் காணப்படும் இரகசிய உறவு என்னவென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்படுத்தியது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்ட திருடர்களை ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாத்து வருகிறது.

பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வசம் காணப்படுவதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொள்ளையர்களை பாதுகாத்து வருவகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் காணப்படும் இரகசிய உறவு என்னவென்று என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தின் கல்விக் கௌரவிப்பு விழா 2017

wpengine

நிதி மோசடி குற்றச்சாட்டு ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை! தனியாக செயற்படுகின்றனர்.

wpengine