பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சின் செயலாளராக நியமனம்

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அரசாங்க அதிபராக கடமையாற்றி பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுச்சென்றுள்ளார்.

இவர் இன்று புதன் கிழமை(14) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சில் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த திங்கள் கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு, காங்கேசன்துறைக்கு இடமாற்றம்.

Maash

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்

wpengine

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை”

wpengine