Breaking
Tue. May 7th, 2024

புதிய இணைப்பு-

மன்னார் -முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் எரிபொருள் அட்டை ஊடாக பெட்ரோல் வழங்க நடவடிக்கை.

(20-07-2022)

மன்னார்- முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை(22) ஆகிய இரு தினங்கள் எரிபொருள் அட்டை ஊடாக வாகனங்களுக்கு எரிபொருள் (பெட்ரோல்) விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

-நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

-கீழ் காணும் நேர அட்டவணைக்கு அமைவாக குறிப்பிட்ட கிராம மக்கள் சென்று தமது வாகனங்களுக்கான எரி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

-ஏனைய கிராம மக்களுக்கு எரிபொருள்(பெட்ரோல்) விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் முன் அறிவித்தல் வழங்கப்படும்.

-இன்றையதினம்(20)புதன் கிழமை முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட போதிலும் எரிபொருள் தாங்கி வழியில் பழுதாகி தாமதம் ஏற்பட்டது.

இதனால் இன்றைய தினம் புதன்கிழமை(20) முருங்கன் (I.O.C) எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் (பெட்ரோல்) விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *