Breaking
Tue. May 7th, 2024

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் பணம் கறக்கும் மோசடி செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவதாக சுங்கத்திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் நட்பையேற்படுத்தும் சிலர் தங்களை வெளிநாடுகளில் வசிப்பவர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடல்கள் மூலம் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்கின்றனர்.

பின்னர் குறித்த பெண்களுக்கு தாங்கள் பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும் அதற்காக சுங்கக் கட்டணம் மட்டும் செலுத்துமாறும் அவர்கள் பெண்களை நம்ப வைத்து பணத்தை மோசடி செய்து விடுகின்றனர்.

இவ்வாறான மோசடிகளில் அண்மைக்காலமாக சாதாரண பெண்கள் மாத்திரமன்றி மருத்துவர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உயர்கல்வி கற்ற பெண்கள் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறான மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிவிடாமல் அவதானமாக நடந்து கொள்ளுமாறு சுங்கத் திணைக்களம் பெண்களுக்கு விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *