பிரதான செய்திகள்

பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! குரங்கள் அடையும் வீடுகள்

இறுதி யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய நிலையில் இது வரையில் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை என ஒட்டுசுட்டன் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பிரதேச செயலகம் குரங்குகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் போது எமக்கு தற்காலிக வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

அதன் பின்னர் எங்களுடைய பிரதேச செயலகத்தின் ஊடாக கட்டம் கட்டமாக நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனாலும் வழங்கப்பட்ட பெருமளவான வீடுகளில் மனிதர்கள் குடியிருக்கவில்லை குரங்குகள் தான் குடிகொண்டுள்ளன.

குறித்த வீட்டு உரிமையாளர்களின் பதிவு மட்டுமே இந்த பிரதேசத்தில் இருக்கின்றது. ஆனால் அவர்கள் வெளியிடங்களில் இருக்கின்றார்கள்.

இவ்வாறு அவசியமறவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டும், அவசியமான எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமலும் இருக்கின்றது.
மேலும், எமது இந்த துன்ப நிலையை மீள்குடியேற்ற அமைச்சு உணர்ந்து எமக்கு வீடுகளை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

105 நாட்களுக்கு மூடப்பட்ட பாடசாலை நாளை மாணவர்கள் இல்லாமல் ஆரம்பம்

wpengine

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! மீள்குடியேற்றத்தில் சாயம் பூச வேண்டாம்.

wpengine

ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்

wpengine