பிரதான செய்திகள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபா பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளயுள்ளார்.

இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வவுச்சர்களை இலகுவில் உரிய காலத்திற்குள் விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine

அவசரமாக சிறுநீரகம் தேவை! உடனடியாக தொடர்பு கொள்ளவும்

wpengine

இலங்கை வரவுள்ள இன்டர்போல்

wpengine