பிரதான செய்திகள்

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள்,காணி அபிவிருத்தி அமைச்சின் கட்டடத்திற்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி காலை 9.30 அளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரியும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அதன் முன்னோடியாகவே இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் சடலம்..!!

Maash

ஹரீஸ்சுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஏன்? ஹக்கீமுக்கு எடுக்க முடியாது

wpengine

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

wpengine