பிரதான செய்திகள்

நினைவேந்தல் நிகழ்வினை வைத்து அரசியல் செய்த விக்னேஸ்வரன்! பின்வரிசையில் கூட்டமைப்பு

இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்து, முள்ளவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டதுடன், கதறி அழுது தவித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பக்கம் கதறி அழும் மக்கள், அஞ்சலி செலுத்தும் உறவுகள், பார்வையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் வருகைத்தந்திருந்தாலும், யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இடம்பெற்றது.

அதாவது, இன்று திரண்ட கூட்டமும், மக்களின் எண்ணமும் தமிழ் மக்களின் அடுத்த தலைவர் விக்னேஸ்வரன் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை ஏற்றுவதற்கான தீப்பந்தத்தை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கேசவன் விஜிதா என்ற யுவதியிடம் கொடுத்தார்.

இந்த யுவதி இறுதி யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்து, உறவினர்களையும் இழந்து, தானும் காயமடைந்திருந்தார்.

அந்த கூட்டத்தில் எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் வந்திருந்த போதும், ஒரு சாதாரண யுவதியிடம் முதலமைச்சர் தீப்பந்தத்தை கொடுத்து ஈகைச்சுடரை ஏற்றவைத்தமை அங்கிருந்தவர்களுக்கு முதலமைச்சர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றே கூறவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்திருந்த போதும், 4 வருடங்களாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த 4 வருடங்களிலும் இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று வித்தியாசமானதாகவும், ஏதோ ஒரு விடயத்தை உணர்த்துவதாகவுமே அமைகின்றது.

இயற்கை கூட இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தலைவணங்குவதாகவும், என்றுமில்லாத வகையில் மக்கள் கூட்டம் திரண்டு வந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களோடு மக்களாக ஒதுங்கி நின்றதை இதில் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்.

இவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் மத்திய இடத்திற்கு வராமல் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும் புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

முதல் வரிசையில் அமர வேண்டிய அரசியல் பிரமுகர்களை காணாத நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வர் உள்ளிட்ட அவர் சார்ந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து நினைவேந்தலை நடத்தியதையும் காணக்கூடியதாக உள்ளது.

Related posts

வடக்கின் புதிய ஆளுநராக தமிழன் மஹிந்த நடவடிக்கை

wpengine

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை

wpengine

ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் மீது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

wpengine