பிரதான செய்திகள்

நாளை வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையம் பூட்டு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்தக நிலையங்களையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன அறிவித்துள்ளார்.


வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.


இந்த நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எனவே நகரின் அனைத்து பகுதிகளையும் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதற்கு அமைவாகவே வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன், பொதுப் போக்குவரத்தும் இடம்பெறாது என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியா எங்களது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது டொனால்டு டிரம்ப்

wpengine

இலங்கையில் 2021 டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 22.1% அதிகரித்து

wpengine

ஞானசார தேரரை விடுதலைக்காக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.

wpengine