Breaking
Mon. May 20th, 2024

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடனேயே தெரிவு செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

நவம்பர் 16ஆம் திகதி நாங்கள் ஒரே கல்லில் இரண்டு குருவிகளை வீழ்த்துவோம்.

நவம்பர் 16ஆம் திகதி கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வது மட்டுமல்ல, நாங்கள் 16 ஆம் திகதி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை அமைப்போம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *