பிரதான செய்திகள்

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் இன்று கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை.

இவர்கள் மேற்கத்தைய தொழிற்கலாச்சாரத்திற்கு அடிபணிந்து செயற்படுவதே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச தலைவர்களுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை இன்று சர்வதேச தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

wpengine

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

wpengine

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

wpengine