Breaking
Sun. May 19th, 2024

வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி .டி. லிங்கநாதன் மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. மயூரனின் கோரிக்கைக்கு அமைவாக நேற்று (09.06.2016 ) அமைச்சர்  டெனீஸ்வரன் , அதிகாரிகளும் குறிப்பிட்ட உமா மகேஸ்வரன் வீதியில்  இருக்கின்ற சமணங்குளம் என்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தனர்.

குறிப்பாக மழை காலங்களில் குளத்தில் இருந்து குளத்தின் வான் பகுதி வழியாக வழிந்தோடுகின்ற நீரினால் குறித்த இடத்தில் ஏறக்குறைய மூன்று அடி அளவிற்கு தண்ணீர் வீதியை குறுக்கறுத்து ஓடுவதனால் இந்த வீதியைபயன்படுத்தும் கோயில்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 7000 குடும்பங்களின் போக்குவரத்து  தடைப்படுவதுடன் பல்வேறு அசெளகரியங்களுக்கும் ஆளாகின்றனர். என அமைச்சர் அவர்களுக்கு குறிப்பிட்ட தரப்பினரால் சுட்டிக்கட்டப்பட்டது.

அதன் நிமித்தமே அமைச்சர்  சம்பவத்தைசுட்டிக்காட்டிய உறுப்பினர்களுடன் அதிகாரிகள் சகிதம் பதிப்பிற்கு உள்ளாகும் இடத்தை பார்வையிட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் தற்பொழுதும் நீர் வீதியை குறுக்கறுத்து பாய்ந்துகொண்டிருக்கின்றது. எனவே இந்த இடத்தில் பாலம்  ஓன்று அமைக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்பதை உணர்ந்த அமைச்சர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிர்வரும் வருடத்தில் முன்னெடுக்க உத்தேசித்துள்ள “கிராமிய ஆயிரம் பாலம்” திட்டத்தின் கீழ்  சமணங்குளம் பாலத்தையும் உள்வங்குமாறு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளருக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆகவே குறிப்பிட்ட கிராமிய பாலம் திட்டம்  நடைமுறைக்கு வரும்போது இந்தப் பாலமும் புனரமைக்கப்பட்டு என தெரிவித்தார்.2d16c850-76ca-4395-bc02-64fee2fbebbc88b6cf90-2966-464b-8250-869d3149445d

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *