பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் காமினி ஜெயவிக்ரம

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி நாடு திரும்பியதும் முன்வைக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் கருத்துரைத்துள்ள அவர், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ராமாண்ய பீடம், தலதா மாளிகையின் நிலமே, கோட்டே ஶ்ரீகல்யாணி கமகீ தர்ம மகா சங்க, அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர் ஆகியோருக்கு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கோரிக்கை தொடர்பில் எந்த அதிகாரிகளுடனும் பேச்சு நடத்த அவசியம் இல்லை.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசவுள்ளதாக காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் சிந்தனைப் பெருவெளி ஒருமுகப்படுவது எப்போது?

wpengine

ரிஷாட்டை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது, அரசியல் பழிவாங்கல்

wpengine

முசலி முஸ்லிம் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்காத பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்! வீரர்கள் கண்டனம்

wpengine