பிரதான செய்திகள்

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நிக்கெய் ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளுமாறும் சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

Related posts

தவம் அவர்களே !, அன்வர் இஸ்மாயிலை வைத்து அரசியல் செய்யும் தேவையில்லை : றிசாத் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டறிந்து கொள்ளலாம் –

wpengine

மகன்கள் இப்படியான பெரிய அழிவை செய்வார்கள் என கனவிலும் நினைத்ததில்லை! இப்ராஹிம்

wpengine

உப்பாற்றுப்பகுதியில் வாழும் மக்களின் மீன்பிடி,விவசாய செய்கை மறுக்கப்படுகின்றது அமைச்சர் றிஷாட்! ஜயவிக்ரம அமைச்சரிடம்

wpengine