பிரதான செய்திகள்

சிலாவத்துறை நீர்பாசன திணைக்களத்தின் அசமந்தபோக்கு! விவசாயிகள் பாதிப்பு! உரிய அதிகாரிகள் கவனம்

மன்னார்-சிலாவத்துறை நீர்பான திணைக்களத்தின் அசமந்த போக்கினால் முசலி பிரதேச மக்கள் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள முடியவில்லை என அறியமுடிகின்றது. 

அகத்திமுறிப்பு நீர்தேக்கத்தின் ஊடாக 12ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்து குளங்களுக்கு நீர் செல்லும் பிரதான வாய்க்கால் சீர்யின்மையினால் சிறுபோகம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சரியான முறையில் உரிய  நேரத்திற்கு நீர் சொல்ல முடியாத நிலைகாணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் 12ஆம் வாய்க்கால் ஊடாக சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்பாசன குளங்களுக்கு நீர் செல்லும் பகுதியாக காணப்படுகின்றது. 

அத்துடன் உரிய முறையில் வாய்க்கால்கள் சீர்செய்யப்பாடாமையினால் சிறுபோகத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள சரியான முறையில் 12ஆம் வாய்க்கால் பூணர்நிர்மானம் செய்யப்படுமா? உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? உரிய காலத்தில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள வாய்க்கால்கள் புனர்நிர்மானம் செய்யப்படுமா?

Related posts

“ஈஸ்டர் தாக்குதலையும் இனவாதத்தையும் மூலதனமாக வைத்து கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றீர்கள்

wpengine

இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டிய ஜோர்டான் எழுத்தாளர் சுட்டுக்கொலை

wpengine

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

wpengine