பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் சந்தேகநபர் ஒருவர், கல்பிட்டி – கரம்ப பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்காகவே குறித்த மருந்து தொகையானது இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 42300 மருந்து அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட வேன் மற்றும் மருந்து தொகையுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை

wpengine

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Editor