பிரதான செய்திகள்

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பான குறித்த புதிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் தேவைகளுக்காக பதவியை பழி வாங்கல்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தெற்கின் ஊடகமொன்று ஊடாக அவர் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பினை உரிய முறையில் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றேன்.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் தனிப்பட்ட குரோதங்களை தீர்த்துக்கொள்ள பதவி நிலைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் நியாயமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

wpengine

திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல

wpengine

காலி முகத்திடலில் விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை : பதற்ற நிலையால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர்.

Maash