Breaking
Sun. May 5th, 2024

தாமும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின்கீழ் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில் பொருளாதார நிபுணரான ஹர்ஷ, ஐக்கிய தேசியக்கட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசியாக செயற்பட்டவராவார்.


ரணில் – சஜித் முரண்பாடு தோன்றியபோது அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக ஹர்ச டி சில்வா தெரிவித்து வந்த நிலையில் தற்போது சஜித்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை தாம் பதவிவகித்த காலத்தில் தமது முழு பங்களிப்பை வழங்கியுள்ளதாக ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *