பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனாவினால் 49வயதான ஒருவர் மரணம்! வவுனியாவில் அடக்கம்

கோவிட் தாக்கத்தால் கிளிநொச்சியில் மரணமடைந்த வவுனியா நபரின் சடலம் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் இன்று (12.05) தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (11.05) இரவு மரணமடைந்தார்.

மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டு, வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்! அனைவரும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை.

wpengine

இணையதள போலி செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம்- அமைச்சர் சரத் வீரசேகர

wpengine

நிதி திரும்புமாயின் விக்னேஸ்வரன் தான் பொறுப்பு! முதலமைச்சரினால் சில வேலைகள் தேங்கி கிடக்கின்றன டெனீஸ்வரன் விசனம்

wpengine