பிரதான செய்திகள்

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை குறித்து சீனா செல்லும் அமைச்சர் அலி சப்ரி!

கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இருதரப்பு விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள் நிலையில் இந்த விஜயத்தின் போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேடமாக பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் “விழுமியம்” காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்!

Editor

சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதம்! மக்களின் பிரச்சினைகள் அல்ல திலும் அமுனுகம (பா.உ) குற்றசாட்டு

wpengine