பிரதான செய்திகள்

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமையானவர் மஹிந்த

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளர்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


எந்த அடக்குமுறை அரசாங்கமாக இருந்தாலும் முதலில் எதிர்க்கட்சியை பிளவுப்படுத்தும்.


மகிந்த ராஜபக்சவுக்கு இந்த திறமை உள்ளது. மகிந்த ராஜபக்ச தன்னுடன் இணைத்து கொண்டவர்கள் மற்றும் கட்சியை இல்லாமல் ஆக்கினார்.


மக்கள் விடுதலை முன்னணியை பிளவுப்படுத்தினார். எந்த கட்சியை பிளவுப்படுத்தவில்லை.
அந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் பிளவுப்படுத்தினார் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் – உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!

Editor

எம்.பி பதவியைக் கொடுத்து சமாளிக்கும் முயற்சியா?

wpengine

அதானி நிறுவனத்துடன் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை..!

Maash