பிரதான செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், நேற்று(11) பிற்பகல் கொழும்பு கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் மேலும் ஒருமுறை பணம் காணாமல் போனது தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாட் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கலாம்.

wpengine

மாட்டிறைச்சி தின்றாலும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது

wpengine

பேஸ்புக் காதல்! உயிரை காப்பாற்ற ஒடிய இளைஞன்

wpengine