Breaking
Sun. May 19th, 2024

இரண்டு சிறு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிருக்காகப் போராடி வருகின்றார்.
அவர் தனது இரண்டு சிறு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தனது உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவுமாறு நல்லுள்ளங்கொண்டவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறார்.

கிளிநொச்சி, ஜெயந்திநகரில் வசிக்கும் சந்திரசிறி சுபாசினி என்னும் 38 வயதுடையவரே இவ்வாறு உயிருக்காகப் போராடி வருகின்றார்.

இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு முப்பது இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் வைத்தியர்களால் கூறப்பட்டுள்ளது.

இவரது கணவர் அன்றாட கூலித் தொழிலாளியாவார்.
இவர்கள் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற கொடிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து எல்லாவற்றையும் இழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு வேண்டி முப்பது இலட்சம் ரூபாய் பணத்தைத் திரட்ட முடியாத நிலையில் அல்லலுற்று உயிருக்காகப் போராடுகின்றார்.

நல்லுள்ளங்கொண்டவர்கள் தமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தனது சத்திரசிகிச்சைக்கு உதவி செய்து, தனது உயிர் காக்க உதவுமாறு மிகவும் எதிர்பார்ப்புடன் உதவி கோரிக் காத்திருக்கின்றார்.

இவர் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்று இவருக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள், இவரது தொலைபேசி இலக்கமான 0094771325372 மற்றும் 0094778302471 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு உதவ முடியும்.

இவர் தொடர்பான மேலதிக விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தொலைபேசி இலக்கமான 0094776913244 எனும் இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் சந்திரசிறி சுபாசினி, இலங்கை வங்கிக் கணக்கு இல. 71331260 எனும் வங்கி இலக்கத்தின் மூலம் உதவ முடியும்.

இவர் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அடங்கிய ஆவணங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *