உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலியில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

மத்திய இத்தாலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிசாலையில் திரண்டனர்.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால்  ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. சாலைகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக முதற்கட்டம தகவல் வெளியானது.  இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related posts

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

wpengine

வங்காலை மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்புத்திட்டம் -டெனிஸ்வரன்

wpengine

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது

wpengine