செய்திகள்பிரதான செய்திகள்

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம்.

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 1997 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை எற்படுத்தி அவ்வாறான தகவல்களை அறிவிக்க முடியும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளைத் தடுப்பதற்கும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

wpengine

ஜனாதிபதி உண்மைக்கு மாறான கருத்துக்களை மன்னாரில் வழங்கியுள்ளார்.

Maash

மன்னாருக்கு பிரதமர் வருகை அமைச்சர் றிஷாட் தலைமையில் விசேஷட ஆலோசனைக் கூட்டம்

wpengine