Breaking
Wed. May 8th, 2024

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.13138998_1809729912593682_2465665678164764837_n

இந்த கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானதுடன், இதில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.13133251_1809729885927018_3008557621457979768_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *