பிரதான செய்திகள்

அமெரிக்கா,இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இந்திய அரசாங்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்கு ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இலங்கையை பிளவுபடுத்துவற்கு பெரும் சூழ்ச்சி செய்யப்படுகிறதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை. உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், இலங்கையில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

அத்தோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதாதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியலமைப்பானது நாட்டை இரண்டு துண்டுகளாகப் பிரிக்கும் முயற்சியாக அமைகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

பேருவளை முஸ்லிம்களை திரும்பியும், பார்க்காத ராஜித சேனாரத்ன-பியல் நிசந்த குற்றச்சாட்டு

wpengine

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

wpengine

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு

wpengine