அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வாக்காளர்கள்களுக்கு மே 6 ஆம் திகதி ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை.

வரும் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறைக் காலம், தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாகக் கருதப்பட வேண்டும் எனவும், இது ஊழியர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறைக் காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின் தடை விரைவில் சீர் செய்யப்படும்! பொது முகாமையாளர்

wpengine

உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையம் இடிந்து விழும் நிலையில்: விவசாயிகள் விசனம் (விடியோ)

wpengine

மக்களுக்கான அசச்சுறுத்தலை தடுக்க,. சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவை கோரியுள்ள காவல் துறை .

Maash