பிரதான செய்திகள்

வரி அதிகரிப்பு ஆட்டோவின் விலை மாற்றம்

வட் வரி அதிகரிப்பை அடுத்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்தது.

இந்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில், முச்சக்கரவண்டி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெற்றதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஜீ.சுதில் ஜயருக் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் வாரத்தில் தீர்க்கமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

கேரளா கஞ்சாவுடன் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

wpengine

காலி முகத்திடலில் விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை : பதற்ற நிலையால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர்.

Maash

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை

wpengine