பிரதான செய்திகள்

வடமேற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!

வடமேற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஆனமடுவ பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஆனமடுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ஆகியோருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், வடமேற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.எஸ்.பதிநாயக்க, புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.ஒய்.எம்.செனவிரத்ன, புத்தள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார, ஆனமடுவ பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி. ஹேரத், மற்றும் ஆனமடுவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் நிலந்த ஆர். பண்டார ஆகியோர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

குறித்த அவசர இடமாற்றத்தை கடந்த 28ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தி பொலிஸ் மா அதிபர் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம், மூத்த டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

எனினும் கடந்த 22ஆம் திகதி ஆனமடுவ ஆலங்குளம் பிரதேசத்தில் நவகத்தகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தாக்கியமை தொடர்பில் குறித்த சம்பவத்தை சமரசம் செய்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்க்ப்பட்டமையே இந்த இடமாற்றத்திற்கான காரணம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை

wpengine

அமெரிக்காவில் ஐ, வேதாளம் படங்களின் வசூலை முறியடித்தது விஜய்யின் ‘தெறி’

wpengine

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி

wpengine