பிரதான செய்திகள்

வடக்கையும் கிழக்கையும் ஒரு போதும் இணைக்கக்கூடாது! – கெஹெலிய

(ரொபட் அன்டனி) 

மாகாண சபைகளுக்கு குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கலாம். ஒரு முறைமையின் கீழ் இதனை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள முஸ்லிம் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாது என்றும் மாகாணங்களுக்கு குறைந்தமட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்றும், மக்கள் கருத்தறியும் குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழப்பு . .!

Maash

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு!

Maash

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் நேற்று மரணம்

wpengine