பிரதான செய்திகள்

ரணிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு இன்று நாட்டிற்கு மீண்டும் திரும்ப உள்ள நிலையில் இது குறித்து இந்திய ஊடகங்கள் நெய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புலிகளுக்காக போராடிய 275 முஸ்லிம்களை ஒரே குழியில் புதைத்தார்கள் -சுபையிர் காட்டம்

wpengine

ஹக்கீம் கூறிய குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு எங்கே?

wpengine

அரசியல்வாதிகளில் பணக்காரர்களான மஹிந்த,மைத்திரி,ரணில் இரு தமிழர்

wpengine