பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மாணவி தேசிய மட்டத்தில் முதலாமிடம்

தேசிய மட்ட தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் குமுழமுனை மகா வித்தியாலய மாணவியான பகீரதன் லாசன்ஜா பிரிவு 2 இல் பங்கு பற்றியுள்ளார்.

இந்த மாணவியின் சாதனை குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்பதோடு இவருக்கு பயிற்றுவித்த ச.சந்திரசேகரம் ,ந.பாலநாதன் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்தியுள்ளனர்.

Related posts

ரணிலுக்கு எதிராக மஹிந்தவின் புதிய கூட்டணி

wpengine

தாஜுதீன் கொலை விவகாரம்! அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில் மகிந்தவின் சாரதியும்

wpengine

மாந்தை கிராம சேவையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்!

wpengine