பிரதான செய்திகள்

மீள் எழுர்ச்சி திட்ட முசலி சந்தையின் அவல நிலை! கவனம் செலுத்துமா? முசலி பிரதேச சபை (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை மீள்குடியேற்ற  திட்ட பகுதியில் அமைக்கபெற்றுள்ள முசலி பிரதேசத்திற்கு சொந்தமான  சந்தை கடந்த பல மாதகாலமாக பராமரிப்பு அற்றநிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த மஹிந்த ராஜபஷ்ச ஆட்சி காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுர்ச்சி திட்டத்தின் ஊடாக பணம் ஓதுக்கீடு செய்து முசலி பிரதேச சபையின் ஊடாக கட்டபட்ட சந்தை இதுவரைக்கும் யாருக்கும் பிரயோசம் இல்லாமல் ஆடு,மாடுகள் உறைவிடமாக தங்கும் கட்டமாக இருந்து வருவதாகவும்,முன்னால் பிரதேச சபையின் தவிசாளர் தன்னுடைய சுயநலத்துக்காக இந்த பகுதியில் கட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.0aa09a5d-e9b1-4339-8866-a8fcae320bb0

பல லச்சம் ருபா செலவில் மக்கள் பணத்தில் கட்டபட்ட இந்த கட்டங்களை இதுவரைக்கும் முசலி பிரதேச சபை பராமரிக்காமல் அசமந்த போக்கில் செயற்படுகின்றது, என்றும் இதனை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த பிரதேசத்துக்குரிய சொத்துகளை பாதுகாக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.40148f2b-8d7b-46fb-9b2b-aee35669000bd534edbf-a3ff-486f-863c-6b77b66ab585

Related posts

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள்! தமிழ் மொழி ஆசிரியர் விம­ல­சார தேரர்.

wpengine

புத்தளத்தில் 20வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

wpengine

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது.

wpengine